வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மொரொந்துடுவ – ஹொரண வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 21 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கொனடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கட்டப்பிறையைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் பலத்த காயமடைந்த நபர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

பொரகந்தவில், மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 81 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் கடவத்தையைச் சேர்ந்த 74 வயதுடைய நபர் ஒருவர் லொறியின் பின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

Social Share

Leave a Reply