தொலைபேசி அழைப்புகளின் ஊடாக புதிய வகை நிதி மோசடி

தொலைபேசி அழைப்புகளின் ஊடாக புதிய வகை நிதி மோசடி

போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு அவற்றின் முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் பயணித்த வாகனங்களை திருத்துவதற்காக ஒருதொகை பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்து மோசடிகள் இடம்பெறுவதாகத் தெரியவந்துள்ளது.

இதற்காக அவசரமாக 10,000 ரூபாவினை வைப்பிலிடுமாறு தெரிவித்து தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்தபோது அவை உயிரிழந்தவர்களின் அல்லது வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமானதெனத் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply