உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஒன்றைப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (21.10) வெளியிட்டார்

மற்றைய அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே தற்போதைய ஜானதிபதி குறித்த அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply