அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை – சந்தேகநபர்கள் இருவர் கைது

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை - சந்தேகநபர்கள் இருவர் கைது

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகு வட்டாரத்தில் தகவல் கிடைத்ததாகவும் இதனால் ஆபத்து நேரிடலாம் என அச்சம் வெளியிடப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை அந்த பகுதிக்கு செல்ல அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Social Share

Leave a Reply