இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களேகைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது இரண்டு படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply