நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருத்தப்பட்டிருந்தன.

அதன்படி இலங்கை மற்றும் போலந்துக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (08/12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் லொட் பொலிஷ் எயார்லைன்ஸ் இந்த விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இலங்கைக்கான போலந்து தூதுவர் பேராசிரியர் அடம் பரகோவ்ஸ்கிக்கும் இடையில் நேற்று (07/12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

Social Share

Leave a Reply