போக்குவரத்து விதிமீறல்களை உடனடியாக அறிவிக்க e-Traffic App!

போக்குவரத்து விதிமீறல்களை உடனடியாக அறிவிக்க e-Traffic App!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியை நேற்று (01.01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் மற்றும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக இந்த செயலியின் மூலமாக முறைப்பாடளிக்க முடியும் என்பதுடன், இலங்கைப் பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இனை அணுகுவதன் மூலம் e-Traffic செயலியை இலகுவாக கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply