‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை இணையம் மூலம் அல்லது செயலி மூலம் ஆதரங்களுடன் முறைப்பாடு செய்யலாம்.
இந்த செயலியை நேற்று (01.01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் மற்றும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக இந்த செயலியின் மூலமாக முறைப்பாடு செய்ய முடியும் என்பதுடன், இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இனை அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை இலகுவாக உங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ, புகைப்பட மற்றும் ஆவண ஆதரங்களையும் பதிவேற்றம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.