கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு அரசாங்கம் தீர்வு

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு அரசாங்கம் தீர்வு

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை
24 மணி நேரமும் இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
இதனை அறிவித்தார்.

இதற்கமைய நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொது சேவை ஆணையத்தின் ஒப்புதலுடன், சேவையை வழங்குவதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை வழங்க,
துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Social Share

Leave a Reply