
மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (09.02) காலை முதல்
மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மின்சாரம் முழுமையாக வழமைக்கு கொண்டுவருவதற்கு பல மணிநேரம் ஆகும்
என ஹேமபால மேலும் தெரிவித்தார்.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில்
மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.