ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நகரின் மத்திய, தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேற்குப் பகுதியில் உள்ள கோர்ரமாபாத் நகரில், விமானத் தாக்குதலால் ஒரு கட்டிடம் முழுமையாக சேதமடைந்து, மின்தடை ஏற்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.