இன்றும் பல பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் பலத்த காற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Social Share

Leave a Reply