நிட்டம்புவ-ருவன்வெல்ல வீதியில் நேற்று (21.05) மதியம் முச்சக்கரவண்டி கவிழ்ந்து ஏற்டபட்ட விபத்தில் கோனகல பகுதியை சேர்ந்த மூன்று மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் கவிழ்ந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதுடன், கவயீனமாக வாகனம் செலுத்தியதால் ஓட்டுநர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.