புத்தாண்டு தொடக்கத்தில் அமைச்சரவை, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.
நஷ்டத்தில் செல்லும் நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலர் அமைச்சரை புறக்கணித்து வருவதாகவும் அவர்களுடன் இணைந்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் அரச நிறுவனங்களால் திறம்பட இயக்கப்படும் சுமார் ஐம்பத்திரண்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.