ஆட்கடத்தலை தடுக்க விசேட திட்டம்

மனித கடத்தலை தடுக்க எதிர்வரும் வருடம் முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித கடத்தல் தொடர்பான தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள் கடத்தலைத் தடுக்க புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் நேரடி ஒருங்கிணைப்பில் வலுவான நிறுவன பொறிமுறையை நிறுவ கடந்த ஜூலை மாதம் மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆட்கடத்தலை தடுக்க விசேட திட்டம்

Social Share

Leave a Reply