அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு

அரியாலை – நெளுக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன், உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்த வேளை, பொலிஸ் விசேட அதிரடிபடையினர் உழவு இயந்திரத்தை வழிமறித்த போது, அதனை நிறுத்தாது தப்பி சென்ற போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில், அரியாலை முள்ளிப் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய் யசிந்தன் என்பவரே படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உழவு இயந்திரத்தை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு

Social Share

Leave a Reply