‘சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதியும் ஒருவர்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய நிதியுதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை – பதுளை – செங்கலடி (ஏ5) வீதியின் பிபிலையிலிருந்து செங்கலடி வரையான 86.7 கி.மீ வீதியை பொதுமக்களுக்கு நேற்று (28/12) கையளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆகையால், ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

‘சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதியும் ஒருவர்'

Social Share

Leave a Reply