நீதி – சிறைச்சாலை அமைச்சுகள் ஊடாக நடமாடும் சேவைகள்

நீதியமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக விசேட நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய இந்த வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக வட மாகாணத்தை அடிப்படையாக கொண்டு, எதிர்வரும் மாதம் 28ஆம் திகதியன்று மக்களை பாதிக்கும் சட்டங்கள் தொடர்பிலும் நல்லிணக்கம் தொடர்பிலும் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை போதைப் பொருள் பாவனை, காணிப் பிரச்சினை தொடர்பிலும், வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி – சிறைச்சாலை அமைச்சுகள் ஊடாக நடமாடும் சேவைகள்

Social Share

Leave a Reply