மீளாய்வு பெறுபேறுகளை வெளியிடும் திகதி அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 51,000 பேர் மீளாய்வு பெறுபேறுகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், அவர்களது பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வு பெறுபேறுகளை வெளியிடும் திகதி அறிவிப்பு

Social Share

Leave a Reply