பெருந்தோட்டத் துறையின் சாதனை

இவ்வருடம் மாத்திரம் தேங்காய் மற்றும் கறுவாப்பட்டை ஏற்றுமதியின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் பெருந்தோட்டத்துறையில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் இது என்றும் அவர் தெரிவித்தார்.

பல சவால்களுக்கு மத்தியில் தேயிலை கைத்தொழிலை எதிர்வரும் வருடம் இலாபம் ஈட்டக்கூடிய தொழிலொன்றாக மாற்ற எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கமைய சுமார் 350 பில்லியன் கிலோ தேயிலையை அறுவடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் துறையின் சாதனை

Social Share

Leave a Reply