பிரதமரின் டுபாய் பயணம் இரத்தானது

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த டுபாய் கண்காட்சிக்கான விஜயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரத்து செய்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 3ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிக்கு பிரதமர் அதிதியாக வருகை தருமாறு டுபாய் ஆட்சியாளர் மொஹமட் பின் ரஷPத் அல் மக்தூமினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ, இதுபற்றி கருத்து தெரிவிக்கும் போது, உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் அடுத்த வாரம் திட்டமிட்ட டுபாய் பயணத்தை இரத்து செய்துள்ளார் என தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமரின் டுபாய் பயணம் இரத்தானது

Social Share

Leave a Reply