ஒரே பிரதேசத்தில் இரு விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு

தெஹிவளை பிரதேசத்தில் ஆயர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபசார விடுதிகளை பொலிஸார் நேற்று (29/12) சுற்றிவளைத்துள்ளனர்.

அதில் முகாமையாளர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்கள் மீகஹதென்ன, பாணந்துறை, வக்வெல்ல, மொரட்டுவை, மடோல்சீம மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 தொடக்கம் 41 வயதுக்குட்பட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தெஹிவளை பிரதேசத்தில் மேலுமொரு விபசார விடுதியிலிருந்து முகாமையாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்கள் ரத்மலானை, பலுகஸ்வெவ, பிட்டபெத்தர, பொட்டல மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரே பிரதேசத்தில் இரு விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு

Social Share

Leave a Reply