10 நாட்களில் 10 இலட்சம் சிலிண்டர்கள்

லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் இறக்கும் பணிகள் கெரவலபிட்டிய இறங்கு துறையில் இறக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இறக்கப்படும் 10 இலட்சம் சிலிண்டர்கள் அடுத்துவரும் 10 தினங்களுக்குள் விநியோகிக்கப்படுமென மேலும் அந்த நிறுவனத்தின் தலைவர் தெஸாரா ஜெயசிங்க கூறியுள்ளார்.

தொடர்ந்தும் லிற்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இறக்கப்டுவதும், விநியோகிக்கப்படுவதும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், மக்கள் வீதிகளில் வரிசைகளில் எரிவாயுவின்றி நிற்பதனை காண முடிகிறது.

இந்த 10 இலட்சம் சிலிண்டர்கள் மூலமாகவாவது மக்கள் வரிசையில் நிற்பது குறைவடையுமா என்பதனை பார்க்கலாம்.

10 நாட்களில் 10 இலட்சம் சிலிண்டர்கள்

Social Share

Leave a Reply