தலைமை பதவியிலிருந்து விலகிய தல

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பதவியிலிருத்து மஹேந்திரா சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் இதனை உறுதி செய்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஆரம்பித்த காலத்திலிருந்து டோனி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக கடமையாற்றி வந்தார். அணி தலைமை பொறுப்பினர் இன்னொருவருக்கு வழங்கும் காலம் சரியாக வந்திருக்கின்றமையினால் டோனி இந்த முடிவினை எடுத்துள்ளார்.

இன்று அணி பயிற்சிகளை ஆரம்பிதற்கு முன்னர் டோனி தனது முடிவினை அணிக்கு அறிவித்துள்ளார். இந்த வருடம் அணியின் வீரராக தொடர்வார் என்றும் அணியின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

41 வயதாகும் டோனி தனது உடல் நிலையினை கருத்திற் கொண்டும், போட்டிகளில் முழுமையாக விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அணியின் மாற்று தலைவரை தயார் செய்யவும் உடனடியாக சிக்கல் ஏற்படும் என்ற நிலையில் இந்த முடிவினை எடுத்திருக்கலாம். அடுத்த வருட போட்டிகளில் டோனி விளையாடுவது சந்த்கேம் என்ற நிலையில் அடுத்த தலைவரை உருவாக்கி அணியினால் வெளியேறும் உக்தியாகவும் இது இருக்கலாம்.

தலைமை பதவியிலிருந்து விலகிய தல

Social Share

Leave a Reply