இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளும் ஆழ்கடல் மீன்பிடி ட்ரோளர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து இலங்கை மீனவர்களது மீன் பிடிக்கு இடையூராக இருப்பதனாலும், அச்சுறுத்துவதனாலும் கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அதன்போது இலங்கை சட்டங்களை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மண்டபம், இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிடிக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

Social Share

Leave a Reply