புகையிரத கட்டணம் அதிகரிப்பு வாபஸ்

இன்றைய தினம் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகியிருந்தன. புகையிரத நிலைய அதிபர்களுக்கே தெரியாமல் இந்த விலையதிகரிப்பு இடம்பெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று மலை நேரப்பகுதியில் விலையேற்றம் செய்யப்பட்ட கட்டணங்களை இரத்து செய்வதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இதன்படி புகையிரத கட்டணங்கள் ஏற்கனவே இருந்த படியே அமுலில் இருக்கும்.

ஆனாலும் புகையிரத கட்டண அதிகரிப்புக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதனால் முன்கூட்டிய அறிவிப்போடு உரிய முறையில் புகையிரத கட்டண அதிகரிப்பு நிகழும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

புகையிரத கட்டணம் அதிகரிப்பு வாபஸ்

Social Share

Leave a Reply