முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 1 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு இரண்டாவது கடவுச் சீட்டினை இராஜதந்திர கடவுச்சீட்டாக பெறுவதற்கான போலி ஆவணங்களை கையளித்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.
