இலங்கையின் சிக்கலான பொருளாதார நிலைமைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் கைகொடுத்து உதவுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கென் தெரிவித்துள்ளார். ஆனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆலோசனைக்கும், திட்டங்களுக்கும் அமையவே அந்த உதவிகள் அமையுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும், கலந்துரையாடல் நல்ல முறையில் அமைந்ததாகவும் அவர் மேலும் தனது ட்விட்டர் செய்தில் கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க “தான் அமெரிக்கா இராஜங்க செயலாளருடன் பேசியதாகவும், அமெரிக்கா இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.
