கனிய மணல் அகழ்வு – செல்வம் MP கலந்துரையாடலுக்கு கோரிக்கை

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் இல்மனைட் கனிம வள மண் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் இல்மனைட் மணல் அகழ்வுக்கு பாரிய எதிர்ப்புகள் இருந்தும் கூட அதற்கு எந்தத் தடையும் இன்றி கனிம வள மணல் அகழ்வுகள் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும்,குறித்த கலந்துரையாடல் ஊடாக இந்த கனிய மணல் அகழ்வவை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிற்கு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிய மணல் அகழ்வு - செல்வம் MP கலந்துரையாடலுக்கு கோரிக்கை

Social Share

Leave a Reply