களுத்துறை, பயகல பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்ற 60 வயதான மொறட்டுவையினை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இறந்துள்ளார்.
எரிபொருள் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்ததனை தொடர்ந்து களுத்துறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கு கொண்டு சென்ற வேளையில் வைத்தியசாலையில் அவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
