பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் நேற்று(11.07) இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையினை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அங்கு இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்தவர்கள் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் சிகிச்சைகளை பெற்று திரும்பியுள்ளனர்.
