இன்றைய நாளுக்குள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் தனக்கு அனுப்பி வைக்கப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே கூறியது போன்று தான் பதவி விலகுவதாக தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது, தனக்கு இந்த விடயத்தை கூறியதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
