பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் விமர்சையாக அனுஸ்டிப்பு.

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (25.08) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் பண்டாரவன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

காலை 8.15மணிக்கு வவுனியா மாவட்டசெயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாகவிருந்தவருமான சட்டத்தரணி மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவித்ததுடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்களால் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் தமிழ்மணி அகளங்கனால் நினைவுரையும் நிகழ்தப்பட்டிருந்து. அதனை தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏனைய அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் விமர்சையாக அனுஸ்டிப்பு.

Social Share

Leave a Reply