எல்ல ஒடிசி ரயில் சேவை அதிகரிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய எல்ல ஒடிசி ரயிலின் சேவைகள் அதிகரிக்கபட்டுள்ளன.

அதற்கமைய தற்போது உள்ள சேவைக்கு மேலதிகமாக எதிர்வரும் 08ஆம் திகதி முதல் பிரதி வியாழக்கிழமைகளில் கொழும்பு தொடக்கம் பதுளை வரையிலும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பதுளை தொடக்கம் கொழும்பு வரையிலும் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது சனிக்கிழமைகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே எல்ல ஒடிசி ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், ரயில் சேவை முன்னெடுக்கப்படும் தினத்திலிருந்து 14 நாட்களுக்கு முன்னர் ஆசனங்களை பதிவு செய்துகொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply