நாளை (07.01) மற்றும் நாளை மறுதினம் (08.01) 18 மணித்தியாலங்களுக்கு, கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணி வரை கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.