இன்றும் மழை!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் லேசான மழை பெய்யும் எனவும்,
தென் மாகாணத்தில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழை!

Social Share

Leave a Reply