இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்துள்ளார்.
நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி முன்னிலையில், பொருளாதாரத்தின் மறுசீரமைப்புக்கு தேவையான இந்நாட்டின் முதலீட்டு செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்த தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தனர்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த உள்ளனர்.

