வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

இம்முறை 329 சபைகளுக்கான தேர்தலுக்காக 80,700 வேட்பாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

58 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும், 329 சுயேச்சை குழுக்களும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

Social Share

Leave a Reply