கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் குத்திக் கொலை!

கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை, டி-சேரம் வீதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று மாலை 55 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக அவரது மைத்துனரால் அவர் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தனது மனைவியின் சகோதரருடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், வாக்குவாதம் முற்றி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் குத்திக் கொலை!

Social Share

Leave a Reply