இன்றும் அதிக மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (22.03), மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மி.மீ. அளவில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

Social Share

Leave a Reply