இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? எனும் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் 24-ம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (06.04) தெரிவித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.