நேபாளத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாவது அதிர்வு 4.8 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், இரண்டாவது அதிர்வு 5.9 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், இரண்டு மணிநேர இடைவெளியில் குறித்த அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நேபாளத்தின் பல மாவட்டங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரையில் தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.