பல இடங்களில் பலத்த மழை!

அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (03.06) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் ௧௦௦ மி.மீ. வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என வைமணடளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என்பதுடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காற்று அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-45) வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version