தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு!

வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…..

1994 ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால் தற்போது வரை அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை.

ஆனால் ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 வீதமான காணிகள் வவுனியாதெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த பெரும்பாண்மையின சிங்களமக்கள் அபகரித்திருக்கின்றார்கள்.

இதேவேளை எமது மதுராகநகரை சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்களபிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறுதுண்டு காணியினை கேட்டபோது அதற்கு அந்தபகுதியில்உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் இவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்டசெயலக மட்டத்தில் அன்று எனக்கு பதில் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது 250 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரித்திருக்கின்றார்கள். எனவே வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்படவேண்டும். என்றார்.

Social Share

Leave a Reply