தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 15ம் திகதி முதல் ஜூலை மாதம் 6ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், ஜூலை 6ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதுவித காரணம் கொண்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply