கிரீஸ் நாட்டில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகு : 79 பேர் உயிரிழப்பு!

கிரீஸ் கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படகு மூழ்கியபோது எத்தனை பேர் அதில் பயணித்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில், எழுமாறாக சுமார் 750 பணிகள் பயணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், படகில் இருந்து 104 பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, படகில் 400 பேர் பயணித்திருக்கலாம் என நம்புவதாக கூறியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் இத்தாலி நோக்கிச் செல்வதற்காக கிழக்கு லிபியாவில் உள்ள டோப்ரூக் பகுதியில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படுகிறது.

Social Share

Leave a Reply