விமல் வீரவன்சவிற்கு பிடியானை!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நடத்திய போராட்டம் தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், மேற்படி பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு மீளழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Social Share

Leave a Reply