இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்படும் செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 17ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 1 கிலோ செயற்கை வண்ணம் அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து மீது விதிக்கப்பட்ட 3.ரூ செஸ் வரி 5.ரூ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ போர்ட்லேண்ட் சீமெந்துக்கான 5 ரூபா செஸ் வரி 8 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
50 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட பொதிகளில் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் போர்ட்லேண்ட் சீமெந்துக்கான செஸ் வரி 3 ரூபாவிலிருந்து 5 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.