இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்று (19.06) இரவு இந்திய மீன்பிடி படகுகள் இருந்ததை அவதானித்த, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒன்பது மீனவர்களையும் கைது செய்துள்ளதுடன், படகையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.