கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் நிறைவேற்றப்பட்டது!

கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் இன்று (01.07) பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் மருதப்பாண்டி ராமேஸ்வரன், ஏ.எல்.எம். அதாவுல்லா, வடிவேல் சுரேஷ், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply